Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்ணயித்த விலைக்கு பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… மணிரத்னம் போட்ட கண்டீஷன்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:58 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. மற்ற திரைகளில் இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்துக்கு முதல் நாள் முதலே அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட்களை விற்கவேண்டும் என தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்னம் கண்டீஷன் போட்டுள்ளாராம். இதன் மூலம் குடும்பம் குடும்பமாக ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்க முடியும் என்று அவர் நம்புகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது: சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments