Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை மட்டும் செய்யாவிட்டால் விவேக் ஆன்மா ஏற்காது… தமிழிசை அறிவுரை!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:46 IST)
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உக்கிரதாண்டவம் ஆடிவரும் நிலையில் இந்தியாவில் புதிய உச்சமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களும் முகக்கவசம் அணிவதை வற்புறுத்தியும், இரவு நேர ஊரடங்கு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிறுத்தியும் பணிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது புதுச்சேரியில் பேசியுள்ள ஆளுநர் தமிழிசை ‘கொரோனாவை தடுக்க எளிய வழி முகக்கவசம் அணிவதுதான். அதே போல புதுச்சேரியில் அதிகமாக இருந்த தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை நடிகர் விவேக் மரணத்துக்குப் பின்னர் குறைந்துள்ளது. நடிகர் விவேக் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊசி போட்டு கொண்டார். ஆனால் அவரது மரணத்தை எண்ணி பயந்து ஊசி போடாமல் இருப்பதை அவரது ஆன்மா ஏற்காது. அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments