Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (07:29 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அப்போது பேசிய ரஜினிகாந்த் “சௌந்தர்யா, என்னிடம் ஞானவேல் சார் ஒரு கதை சொன்னதாக சொன்னார். நான் அப்போது அவரிடம் சொன்னேன். சார் நீங்க மெஸேஜ் சொல்லுவீங்க. நமக்கு அது செட் ஆகாது. நமக்குக் கமர்ஷியலா இருக்கணும். மக்கள் கொண்டாடனும்னு. அவர் கொஞ்சம் டைம் கேட்டார். அப்புறம் போன் பண்ணி சார் நான் கமர்ஷியலா பண்றேன். ஆனால் லோகேஷ், நெல்சன் பண்ற மாதிரி கமர்ஷியலா பண்ண மாட்டேன். உங்கள ரசிகர்கள் எதிர்பாக்குற வேறொரு கண்ணோட்டதுல காட்டுறேன்னு சொன்னார். நான் உடனே சொன்னேன். அதான் நமக்கு வேணும்னு” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments