Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

vinoth
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (14:27 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி கதைகள் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் மூன்று மாதங்களில் தன்னுடைய சுயசரிதையை எழுதி முடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

பாபா படம் ரிலீஸான பின்னர் ரஜினிகாந்த் தன்னுடைய சுயசரிதையை எழுதத் தொடங்கினார். அவருடன் இணைந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பணிகளைக் கைவிட்டார் ரஜினிகாந்த்.  சுயசரிதை எழுதினால் காந்தி மாதிரி அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடவேண்டும். என்னால் அப்படி சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை என சுயசரிதை குறித்து முன்பொரு முறை ரஜினிகாந்த் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 200 கோடி… கேரளாவில் மட்டும் 100 கோடி… மோகன்லாலின் ‘துடரும்’ படைத்த சாதனை!

சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது?... ஆர்யா பகிர்ந்த தகவல்!

பிரபுதேவா & ரஹ்மான் இணையும் ‘Moon walk’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபலம்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா.. வெளியான தகவல்!

ஆமிர்கானின் மகாபாரதம் படத்தில் அல்லு அர்ஜுன்.. எந்த வேடம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments