Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தில் இருந்து லைகா நிறுவனம் பின்வாங்கியது ஏன்?

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (16:18 IST)
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இருந்து லைகா நிறுவனம் விலகியதற்கான காரணம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.


 

 
அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதன்பிறகு, அவருடைய படத்தை இயக்கப் போவது ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்பது உறுதியாகி விட்டது. அந்தப் படத்தை, ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் விஜய், அடுத்த படத்துக்கு 50 கோடி ரூபாய் கேட்டாராம்.

அத்துடன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் தனக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகச் சொல்கிறார்கள். இவர்களுடைய சம்பளமே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரும் நிலையில், படத்துக்கு 50 கோடியாவது ஆகும். எனவேதான் அந்தப் படத்தில் இருந்து லைகா நிறுவனம் விலக, அதற்குப் பதிலாக சன் டி.வி. தயாரிக்க இருக்கிறது
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments