Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கான் பயப்பட வேண்டாம்… கொலை மிரட்டல் குறித்து கங்கனா ரனாவத் கருத்து!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (08:10 IST)
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிசி கா கிசி கி பாய்  ஜான் படத்தில் நடித்து அதை ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த நிலையில்,  மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு  நபர், தன்னை ராக்கி பாய் என்று அறிமுகம் செய்துகொண்டு, தான் ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடிகர் சல்மான்கான் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சல்மான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள கங்கனா ரனாவத் “சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளதால் அவர் எதற்கும் பயப்பட வேண்டாம்.  இன்று நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. நாம் எதற்கும் கவலைப்பட தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments