Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடோடிகள் 2 படத்திற்காக சூர்யாவை அழைத்த சமுத்திரக்கனி

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (15:45 IST)
நாடோடிகள் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘நாடோடிகள்’. 2009ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், விஜய் வசந்த், பரணி, அபிநயா, அனன்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பர்களைப் பற்றிய இப்படம் கதை ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
 
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு  முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சசிக்குமார், அஞ்சலி, பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், உள்ளிடோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments