Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பொன்னியின் செல்வன்-1'' படத்தை இந்தி, கன்னடத்தில் வெளியிடுவது யார் ? முக்கிய தகவல்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (20:32 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் இந்தி, கன்னட வெளியீட்டு உரிமையைப் பெற்றவர்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் என்ற  நாவலை இயக்குனர் மணிரத்னம் பெரும்    பொருட்செலவில் படமாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த  நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை இந்தியில் பென் மூவிஸ்  என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் வெளியிடவுள்ளதாகவும், கன்னடத்தில் இப்படத்தை கே செந்தில் வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வதாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக வெளியாவதால் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

ஷாருக் கான் படத்தில் சூர்யா?… தூம் 4 படத்தில் இணைந்ததாக தகவல்!

சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்… தயாரிப்பாளர்களுக்குப் பரிசு!

விஜய்யின் கோட் திரைப்படத்தின் தமிழக வசூல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments