Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க அப்பா எப்போதோக் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார் – சண்முகபாண்டியன் பகிர்ந்த தகவல்!

Advertiesment
விஜயகாந்த்

vinoth

, சனி, 17 மே 2025 (10:32 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த  2023 ஆம் ஆண்டு காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சமீபகாலமாக இவ்வளவு பேர் கலந்துகொண்ட ஒரு இறுதி ஊர்வலத்தைத் தமிழ்நாடு காணவில்லை.

விஜயகாந்த் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அதன் காரணமாக அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார். அதன் காரணமாக கட்சி பொறுப்புகளை அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பார்த்துக்கொண்டார். ஆனாலும் அவர் கட்சி அப்போது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

விஜயகாந்தின் உடல்நலக் குறைவுக்கு மிக முக்கியமானக் காரணம் அவருக்கிருந்த குடிப்பழக்கம்தான் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் விஜயகாந்தின் இளையமகனும் நடிகருமான சண்முகபாண்டியன் இதுபற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “யாருதான் குடிக்கல?.. ஆனா எங்க அப்பா எப்பவோ குடிப்பழக்கத்த விட்டுவிட்டார். அவர் கண்கள் எப்போதும் சிவப்பாகதான் இருக்கும். அதைப் பார்த்துவிட்டு அவர் குடித்துவிட்டு வந்து நிற்கிறார் என்றார்கள். அந்த காலத்தில் ஊடகங்களில் அவர் திட்டமிட்டு கேலிப் பொருளாக்கப்பட்டார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் காதலில் விழுந்தாரா சமந்தா?.. சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்!