Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கதை சொன்னார்.. கே.வி.ஆனந்த் படத்துல நடிக்கலாம்னு இருந்தேன்! – சிம்பு வேதனை

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:42 IST)
இயக்குனர் கே.வி.ஆனந்த் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள நடிகர் சிம்பு அவருடனான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இயக்குனராக பல வெற்றி படங்களை எடுத்து புகழ் பெற்றவர் கே.வி.ஆனந்த். தற்போது மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிம்பு “அதிர்ந்து பேசாத மனிதர் கே.வி.ஆனந்த். அவரது கோ படத்தில் நான் நடிக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் எனக்கு மிக அருமையான கதை ஒன்றை சொல்லியிருந்தார். அவருடன் இணைந்து படம் செய்யலாம் என்று ஆவலாக இருந்தேன்” என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments