Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

vinoth
வெள்ளி, 3 ஜனவரி 2025 (12:30 IST)
கங்குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்தூரை அடுத்த பொள்ளாச்சியில் நடந்தது. அதன் பின்னர் தற்போது கோவை வேளாண்மை கல்லூரியில் செட் ஒன்று அமைத்து படமாக்கி வருகிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

இதையடுத்து பொங்கலுக்குப் பிறகு ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். இதற்காக சென்னையில் ஒரு ஸ்டியோவில் பிரம்மாண்டமான நீதிமன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

நிக்காத வசூல்… தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி ரூபாய் வசூலா?... கலக்க்ம் GBU

25 ஆவது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்த் அஜித்& ஷாலினி…க்யூட் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments