Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே… சீரியல்களின் நேரத்தைக் குறைத்த தொலைக்காட்சிகள்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:09 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மற்றும் கிழமைகள் குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இந்நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் இப்போது எபிசோட் பற்றாக்குறைகளை சமாளிக்க தொலைக்காட்சிகள் திங்கள் முதல் சனி வரை என்று இருந்த ஒளிபரப்பு கிழமைகளை திங்கள் முதல் வியாழன் வரை என்று குறைத்துள்ளன. மேலும் நேரத்தை 24 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் எனவும் குறைத்துள்ளனர். இந்த நான்கு நிமிடத்தை ஈடுகட்ட முந்தைய எபிசோட்களின் கதைசுருக்கம் மற்றும் டைட்டில் பாடல்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments