Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தலைமுறையினருக்கு இயக்குனர் பாலா யார் என்பதை இந்த படம் காட்டும்.. அருண் விஜய் நம்பிக்கை!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (08:37 IST)
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.

அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு நாளை இந்த படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் படம் சம்மந்தமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் அருண் விஜய் “வணங்கான் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.. பாலா சார் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்த தலைமுறை ரசிகர்களுக்கு பாலா சார் யார் என்பது வணங்கான் மூலம் தெரியவரும். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments