Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் லாக்டவுன்… மீண்டும் தள்ளிப்போன துப்பறிவாளன் 2 ஷூட்டிங்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:19 IST)
விஷால் எப்படியாவது துப்பறிவாளன் 2 படத்தை முடித்துவிட வேண்டும் என திட்டம் போட்டாலும் அது தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் விஷால் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இங்கிருந்து சென்று படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாம். அதனால் மறுபடியும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments