Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஹரி& விஷால் இணையும் புதிய படம்!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (15:40 IST)
இயக்குனர் ஹரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு யானை படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் குறைவைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஹரி மீண்டும் தன்னுடைய ஹிட் பார்முலா படமான போலீஸ் ஆக்‌ஷன் கதைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் நடிக்கும் போலீஸ் ஆக்‌ஷன் கதையை ஹரி இய்கக உள்ளாராம். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் உருவான சாமி, சிங்கம் மூன்று பாகங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகின. தமிழ் சினிமாவில் போலீஸ் ஆக்‌ஷன் படங்கள் எடுப்பதில் வல்லவர் என பெயர் பெற்றார் ஹரி. இப்போது மீண்டும் அவர் போலீஸ் கதைக்கு வருவது அவர் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments