Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கினை நான் லண்டனுக்கே அழைத்துச் சென்றிருக்கக் கூடாது… விஷால் கருத்து!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:04 IST)
துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது எனிமி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் விஷால் துப்பறிவாளன் 2 ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார். மேலும் ’துப்பறிவாளன் 2 படத்தை அநாதையாக விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை நான் தத்து எடுத்துக்கொண்டேன். அந்த படத்துக்காக மிஷ்கினை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. அது என் தவறுதான். இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments