Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 பார்க்க சென்ற பெண் பலி! அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

Prasanth Karthick
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:09 IST)

ஹைதராபாத்தில் புஷ்பா 2 பார்க்க சென்ற பெண் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்து நேற்று ரிலீஸான படம் ‘புஷ்பா 2’. இந்த படத்தின் முதல் பாகம் பெரும் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் நேற்று பல மொழிகளிலும் வெளியான இந்த படத்திற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

 

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் பார்க்க பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் சென்றுள்ளார். அந்த சமயம் திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருவதாக தகவல் வெளியானதும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிக்கி பெண் பரிதாபமாக பலியான நிலையில், 9 வயது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அல்லு அர்ஜுன் வருவது குறித்து போலீஸாருக்கு தியேட்டர் நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் சந்தியா திரையரங்கம் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“வளர்ந்து வாங்க ரமணா 2 எடுப்போம்… “ சண்முகபாண்டியனை வாழ்த்திய இயக்குனர் முருகதாஸ்!

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments