துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு வந்த சம்மன்: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:49 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. மாநில அமைச்சர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன் ஓபிஎஸ் விரைவில் ஆஜராவார் எறு கூறப்பட்ட நிலையில் அவர் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா மறைவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்-ம் உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி ஓபிஎஸ் எந்தவிதமான வாக்குமூலத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அவர்களிடம் நடத்தும் விசாரணையுடன் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ளதாகவும், அதனையடுத்து விரைவில் தமிழக அரசுக்கு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

அடுத்த கட்டுரையில்
Show comments