Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மாணவி உயிரிழந்த விவகாரம்: பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியவர் கைது

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (08:02 IST)
கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் போலி பயிற்சியாளர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவரது பயிற்சியாளர் சான்றிதழும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மாணவி உயிரிழப்புக்கு  காரணமான பயிற்சியாளருக்கு  போலி சான்றிதழ் தயாரிக்க  உதவிய அசோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணம் வாங்கி கொண்டு போலியாக பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அசோக்கிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தால் இன்னும் ஆறுமுகம் போல் எத்தனை பேருக்கு அவர் போலி பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது  தெரியவரும்
 
ஆறுமுகம், அசோக் உள்பட இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments