Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப் 1 தேர்வு - வயது உச்சவரம்பு அதிகரிப்பு

Advertiesment
குரூப் 1
, வெள்ளி, 1 ஜூன் 2018 (11:41 IST)
குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்சவரம்பை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
 
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மானியம் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
 
குரூப் 1 தேர்வுக்கான உச்சவரம்பு வயதை மாற்றக்கோரி பல்வேறு நாட்களாக கோரிக்கைள் விடப்பட்ட நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, குரூப் 1, 1ஏ, 1பி தேர்வு எழுதுவோருக்கான வயது உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 
குரூப் 1
அதன்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உச்சவரம்பு வயது 35லிருந்து 37ஆகவும், அதேபோல் பொதுப்பிரிவினருக்கு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என முதல்வர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரூப் 1 தேர்வு - வயது உச்சவரம்பு அதிகரிப்பு