Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா தான் எனக்கு முன்மாதிரி: பிரதமர் பதவியை ஏற்க போகும் இம்ரான்கான் பேட்டி

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (19:22 IST)
பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 76 தொகுதிகளில் வெற்றி பெற்றும் 43 இடங்களில் முன்னிலையில் பெற்றும் உள்ளது. ஆட்சி அமைக்க மொத்தம் 137 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போது 119 தொகுதிகளில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தானில் புதிய அரசு அமையப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இம்ரான்கான், 'சீனாதான் எனக்கு முன்மாதிரி. நாடாக உள்ளது. சீனாவில் வறுமையின் பிடியில் இருந்த 70 கோடி மக்களை அந்நாட்டு அரசு மீட்டெடுத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் வறுமையில் உள்ளவர்களை மீட்பதுதான் முதல் வேலை. 
 
நான் அரசியலுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகின்றது. பாகிஸ்தானின் ஏற்ற இறக்கங்களை பார்த்து வந்துள்ளேன். 22 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அல்லாவிற்கு நன்றி. நான் கனவு கண்ட பாகிஸ்தானை உருவாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அரசு நபிகள் ஆட்சி காலத்தில் இருந்ததை போன்றதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments