Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா ராம்தேவின் புதிய சிம்கார்டு: ஜியோவுக்கு போட்டியா?

Webdunia
திங்கள், 28 மே 2018 (18:49 IST)
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்த போட்டியில் ஏர்செல் நிறுவனம் நஷ்டத்தால் வெளியேறிவிட்டது.
 
இந்த நிலையில் ஜியோவுக்கு கடுமையாக போட்டி தரும் வகையில் பதஞ்சலி நிறுவனம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம்கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதேசி சம்ரித்தி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில் ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். மேலும் இந்த சிம்கார்டை வாங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வசதியும் உண்டு.
 
ஆனால் இந்த சிம்கார்டு தற்போதைக்கு பதஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இருப்பினும் வெகுவிரைவில் பொதுமக்களுக்கும் இந்த சிம் கிடைக்கும் என்றும் அவ்வாறு பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் போது இந்த சிம்கார்டை வாங்குபவர்களுக்கு பதஞ்சலி தயாரிப்புகளில் 10% சலுகை வசதியும் தரப்படும் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments