Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி கைது

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (11:29 IST)
தமிழக அரசை திரைமறைவில் இருந்து ஆட்டிப்படைப்பது பாஜக தான் என அனைத்து கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் குருமூர்த்தி அளித்த பேட்டியில் தன்னை பார்த்த பின்னர்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார் என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழக அரசை திரைமறைவில் இருந்து இயக்கி, அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறி ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி இன்று முயற்சி செய்தார். இதனை அடுத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நந்தினி பின்னர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் உள்ள குருமூர்த்தி வீட்டுக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணவியின் நந்தினிக்கு நெட்டிசன்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நந்தினியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments