Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடைமிளகாய் புதினா புலாவ் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாசுமதி அரிசி - ஒரு கப்
குடைமிளகாய் - 2
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு  
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.
 
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
 
தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சூப்பரான குடைமிளகாய் புதினா புலாவ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

இதய நோயாளிகள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!

தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்..!

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments