Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் மரவள்ளிக் கிழங்கு தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு அவற்றை துருவிக் கொள்ளவும், பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு  சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 
பின்பு அவற்றில் இருக்கும் பாலை பிழிந்து வெளியேற்றி விட்டு ஒரு பாத்திரத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவும். பின்பு புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடேற்றி கொள்ளவும்.

பின்பு புட்டு குழலை எடுத்துக்கொண்டு, அதனுள் சிறிய ஓட்டை உள்ள தட்டை வைத்து, முதலில் தேங்காய் துருவலை சிறிதளவு போட்டு கொள்ளவும். பின்பு  மரவள்ளிக் கிழங்கு துருவலை போடவும், இவ்வாறு தொடர்ந்து தேங்காய் துருவல், மரவள்ளிக் கிழங்கு துருவல் என்று குழலை நிரப்பவும். குழல் நிரம்பியதும் இந்த  குழலை புட்டு பாத்திரத்தில் இணைத்து, வேக வைத்து இறக்கினால். சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி?

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments