சுவையான காய்கறி பிரியாணி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிதளவு
தயிர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு - ஒன்றரை டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
தக்காளி - 3
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு அனைத்தும் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய்யை நெய் உற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
 
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த காய்கறி பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments