Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட்ட இந்திய மருத்துவருக்கு 10 மாதம் சிறை

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:20 IST)
அமெரிக்காவில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக இந்திய மருத்துவருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பலர் பாலியல் தொடர்பான வழக்குகளில் அவ்வப்போது சிக்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான அருண் அகர்வால் (வயது 40) அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் டேட்டன் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 2 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டுள்ளார். 
 
பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அருண் அகர்வால்  கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணையின் போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அருண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என முடிவு செய்த நீதிமன்றம், அவருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்