Publish Date: Thu, 03 Sep 2026 (12:26 IST)
Updated Date: Thu, 03 Sep 2026 (12:27 IST)
திபெத் - நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் போடே கோஷி நதியில் சீறி பாய்ந்தது. ஆற்றில் இருந்த கல், மண், சேறு, பாறை மற்றும் ஆற்றோரத்தில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் அந்த வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு சென்றது..
சகதியுடன் பல அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் யாராலும் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை.. பாலங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளும் அதில் அடித்து செல்லப்பட்டன..
இந்த இயற்கை பேரழிவு இதுவரை 1204 பேர் பலியாகிவிட்ட நிலையில் 4200 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது..தேசிய பேரிடர் மீட்பு படையினர் இதுவரை 12, ஆயிரம் பேரை மீட்டுள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க