Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து...12 பேர் உயிரிழப்பு

Sinoj
புதன், 20 மார்ச் 2024 (19:40 IST)
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 
 
இங்குள்ள பலுசிஸ்தானில் சுரங்கம் தோண்டும்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவில் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இவ்விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments