Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காருக்குள்ள யாரு? தலையை வெளிய நீட்டிய 15 அடி நீள பாம்பு!

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (16:22 IST)
சாலையோரம் நின்றிருந்த காருக்குள் இருந்து 15 அடி நீள பாம்பு ஒன்று வெளியனதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அமெரிக்காவில் கொலரடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகர் சாலையில், கார் ஒன்றில் அதன் உரிமையாளராக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் காருக்குள் யார் இருக்கிறார் என பார்க்க முயற்பட்ட போது 15 நீள் பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. முதலில் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு துறையினர் பின்னர் பாம்பை மீட்டனர். 
 
காரின் உரிமையாளராக சந்தேகிக்கப்பட்ட நபர் குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம். குறிப்பாக செல்ல பிராணியான பாம்பு உள்ளிட்ட விலங்குகளுடன் பயணிக்க வேண்டாம் என எச்சரித்து டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments