Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் பொதுமக்கள் 198 பேர் பலி! சுகாதாரத்துறை அறிவிப்பு

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (15:29 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  உலக நாடுகள் யாரும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை.

நேற்று உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்ய தரப்பு கூறிய  நிலையில், உக்ரைனும் பேச்சுவார்த்தைகுத்தயார் என தெரிவித்தது.

சர்வதேச நாடுகள் இப்பிரச்சனையைக் கூர்ந்து  கவனித்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments