Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்: தட்டிக்கேட்ட மாணவியை உயிரோடு எரித்த கொடூரம்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (16:12 IST)
தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த மாணவி ஒருவர் பள்ளியில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்கதேசத்தை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி(19) என்ற இளம்பெண் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஜகான் ரபியிடம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் அந்த தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியருக்கு வேண்டிய நபர்கள், மாணவியிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் மாணவி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கடுப்பான அந்த கும்பல் மாணவியை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து இந்த கொடூர செயலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்