Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்! – மக்கள் அலறியடித்து ஓட்டம்!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (12:15 IST)
பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் அதிர்ந்தன. மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கம் மத்திய மிண்டானோ முதல் சுற்றியுள்ள அனைத்து மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தெரியவரவில்லை.

இதே அக்டோபர் மாதம் 16ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிண்டானோ பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்தன. 5 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments