Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் இருந்து வந்த மற்றொருவருக்கு குரங்கம்மை? – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (10:46 IST)
உலகை உலுக்கி வரும் குரங்கம்மை நோயால் கேரளாவை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய குரங்கம்மை என்ற புதிய நோய் தற்போது ஐரோப்பிய, வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இந்தியாவில் பதிவான முதல் குரங்கம்மை பாதிப்பு இதுவாகும்.

அதை தொடர்ந்து கடந்த 2 நாட்கள் முன்னதாக துபாயிலிருந்து வந்த மற்றொருவருக்கும் குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பூனா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளுக்கு பிறகே அவருக்கு குரங்கம்மையா என்பது தெரிய வரும். எனினும் கேரளாவில் இருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தெரிய வந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments