Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 26 பேர் பலி

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:03 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் 4.9 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
மாகாண தலைநகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கங்களால், ஆப்கானிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments