Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாட்டா காட்டிய ட்ரம்ப்: பாட்ஷாவான பில்கேட்ஸ்: WHO நிலை இதுதான்!!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (10:27 IST)
WHO-வின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் உருவெடுத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களை திரட்டி அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு.   
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதக கூறி அவ்வாரே செய்தார். 
 
இதனைத்தொடர்ந்து சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழக்கமாக வழங்கும் நிதியைவிட கூடுதல் நிதியை வழங்க துவங்கியது. ஆனால் இப்போது யாரும் எதிர்பாரா வகையில் உலக சுகாதார நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது WHO லிருந்து வெளியேறியது அமெரிக்கா. 
 
அமெரிக்கா விலகியதையடுத்து WHO-வின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் உருவெடுத்துள்ளது. ஐநாவின் ஒரு பகுதியான WHO-வில் தனியார் நிறுவனம் ஒன்று செல்வாக்கு மிக்கவராக உருவெடுத்திருப்பது இதுவே முதல் முறை. 
 
ஆனால், WHO-வில் தனியார் நிறுவனத்தின் செல்வாக்கு அதிகரித்திருப்பது உலக சுகாதார நிபுணர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments