Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

Prasanth Karthick
வெள்ளி, 17 மே 2024 (13:03 IST)
இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமம் பல நாடுகளிலும் முதலீடு செய்து வரும் நிலையில், நார்வே நாட்டில் அதானி நிறுவனம் முதலீடு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நிறுவனமான அதானி குழுமம் உலகம் முழுவதிலும் தனது அதானி எண்டெர்ப்ரைசஸ், எண்டிடிவி, அதானி க்ரீன் எனெர்ஜி, அதானி பவர், அதானி போர்ட் என பல கிளை நிறுவனங்கள் மூலம் ஏராளமான கோடி வர்த்தகத்தை செய்து வருகிறது. இதற்காக பல நாடுகளிலும் பல கோடிகளை அதானி நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்களின் முதலீடுகளையும் தங்கள் பால் அதானி நிறுவனம் ஈர்த்து வருகிறது. பல நாட்டு அரசுகளின் இன்சூரன்ஸ், வைப்புநிதி நிறுவனங்களும் அதானி போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்கின்றன.

ALSO READ: பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அந்த வகையில் நார்வேயில் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி ஓய்வூதிய நிதி முதலீட்டிற்கு தகுதியான பன்னாட்டு நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடுகளை செய்து வருகிறது. அவ்வாறாக முதலீடு செய்ய தகுதி வாய்ந்த நிறுவனங்கள் என அந்நாட்டு வங்கி பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் இருந்து அதானி நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அதானி நிறுவனத்தின் அதானி போர்ட்ஸ் துறைமுக நிறுவனம் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதனால் அதானியில் முதலீடு செய்வது அபாயம் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதானி நிறுவனம் மீது இதற்கு முன்னர் பன்னாட்டு பங்குசந்தை ஆய்வு நிறுவனங்கள் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments