Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு எதிராக கனடா... ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (14:02 IST)
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவிப்பு. 

 
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம்.
 
சீனாவில் இன சிறுபான்மையிருக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுகொண்டது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து  சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
 
ஆம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் ஒலிம்பிக் போட்டிகயை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து நியூஸிலாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவு..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.. முழு விவரங்கள்..!

நாடு சுதந்திரம் ஆன பின்னர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்.. உபி கிராமத்தில் அதிசயம்..!

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments