Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவை அடுத்து கனடாவிலும் டிக்டாக் செயலிக்கு தடை..!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:34 IST)
அமெரிக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எந்த தடையும் கிடையாது. இந்த நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை என நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஅதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
ஏற்கனவே அமெரிக்க அரசு அலுவலங்களில் இந்த டிக் டாக் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கனடாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அது மட்டுமின்றி இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் முழுமையாக டிக்டாக் செயலிக்கு தடை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டிக் டாக் செயலிகு பெரும் வருவாய் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments