Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்குள் வந்த கொரோனா, சீனா பெருமிதம்! உலக நாடுகளில் நிலையோ..?

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (16:28 IST)
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் அந்நாட்டில் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது.  
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,939 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் நோய் பாதிப்பு காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஆனால், சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலியில் 1,016 ஆக அதிகரித்துள்ளது.  
 
இதேபோல அமெரிக்காவின் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொரானா வைரஸால் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படி உலக நாடுகளுக்கு பீதியை கிளப்பிவிட்டு தற்போது தங்களது நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர சீனா அதீத அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments