Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதங்களை இரு மடங்காக்க சீனா திட்டம்! – அமெரிக்கா எச்சரிக்கை!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:49 IST)
சீனா – அமெரிக்கா இடையே சில காலமாக மோதல் எழுந்துள்ள நிலையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார ரீதியான மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில் கொரோனா விவகாரத்திலும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில் சீனாவின் கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்கள் புகுந்தது நிலைமையை இன்னும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினை, தைவானுடனான பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு போன்றவற்றால் சீனாவுக்கு உலக நாடுகளிடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை இரு மடங்காக அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான மோதல் போருக்கு வித்திடுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments