Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா கட்டும் புதிய விண்வெளி நிலையம்! – மூன்று வீரர்கள் விண்வெளியில்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (12:14 IST)
விண்வெளியில் சீனா தனக்கென புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ள நிலையில் மூன்று சீன வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பங்கேற்பில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையமே இதுவரையிலான ஒரேயொரு விண்வெளி மையமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையம் காலவதி காலத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் சீனா தனக்கென விண்வெளியில் தனியாக விண்வெளி மையம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக புதிய விண்வெளி மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று சீன விண்வெளி வீரர்கள் ஷென்சூ12 விண்கலம் மூலமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா, அங்கு அவர்கள் மூன்று மாதம் தங்கியிருந்து விண்வெளி மைய கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments