Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸால் ஹாங்காங்கில் ஒருவர் பலி..

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:58 IST)
கொரோனா வைரஸால் உயிரிழப்பு

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸால் சீனாவில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் ஹாங்காங்கில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், 425க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா, தைவான், ஹாங்காங், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் வைரஸ் பரவி வருகிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனிடையே சீனாவின் உகான் நகரிலிருந்து திரும்பிய ஹாங்காங்கை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 39 வயதான இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸால் பலியான நிலையில் சீனாவிற்கு வெளியே உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments