Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1500% ஏறிய பிட்காயின் மதிப்பு திடீரென குறைந்ததால் அதிர்ச்சி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (06:32 IST)
இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும் பிட்காயினில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 1500% உயர்ந்துள்ளதே இந்த வர்த்தகம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் பிட்காயினில் செய்யப்படும் முதலீடுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிட்காயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் மட்டும் 15 புள்ளிகள் குறைந்துள்ளது. இதனால் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாலும்,  தென் கொரியாவின் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்த யூபிட் எக்ஸ்சேஞ்ச், திவாலாகி இருப்பதும் இந்த திடீர் இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில்  தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்ததால், தன்னை சரி செய்து கொள்வதற்கு இதுபோன்று இறங்குமுகம் அனைத்து வர்த்தகத்திலும் சகஜம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments