Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானவரி அதிகாரிகளிடம் சம்பள விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.. ஊழியர்களுக்கு பிபிசி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:12 IST)
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் மூன்றாவது நாளாக இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தனிப்பட்ட சம்பள விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஊழியர்களுக்கு பிபிசி தெரிவித்துள்ளது. 
 
வருமானவரித்துறையினர் தனிப்பட்ட ஊதியம் குறித்து கேள்வி கேட்டால் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊதியம் தொடர்பான மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்றும் பிபிசி அறிவித்துள்ளது. 
 
மேலும் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்குமாறும் பிபிசி குறிப்பிட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பிபிசி அலுவலகங்களில் 20 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி வருவதை அடுத்து ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து பணிபுரிய லண்டனை தலைமையிடமாக கொண்ட பிபிசி அறிவுறுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments