Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் பெய்த ஒரு ஆண்டு மழை.. துபாய் விமான நிலையம் முடக்கம்..!

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:25 IST)
துபாயில் வரலாறு காணாத மழை பெய்ததை அடுத்து துபாய் சர்வதேச விமான நிலையம் முடக்கப்பட்டதாகவும் துபாயில் உள்ள பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக துபாய் போன்ற அரபு நாடுகளில் மழை பெய்வது அரிதாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டியது. வரலாறு காணாத கனமழை காரணமாக துபாய் தெருக்களில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் குறிப்பாக துபாய் விமான நிலையம் தண்ணீர் தேங்கியதால் விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடங்கியுள்ளது. நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்றும்,  440  விமானங்களை தாமதமாக இயக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து அபுதாபி, சார்ஜா, குவைத்திற்கு செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments