Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதியை மீறி கொண்டாட்டம்! – மன்னிப்பு கேட்ட டச்சு அரச குடும்பம்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (11:39 IST)
நெதர்லாந்தில் கொரோனா விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில் அரச குடும்பம் மன்னிப்பு கேட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரானின் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க கிறிஸ்துமஸ் கால விடுமுறையை முன்னதாக அறிவித்த நெதர்லாந்து பள்ளிகளை மூடியுள்ளது.

மேலும் நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 6 விருந்தினர்களுக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டச்சு அரச வம்சமான இளவரசி அமாலியாவின் 18வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் விதிமுறைகளை மீறி 21 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த தகவல் பொதுமக்களிடையே பரவி பல்வேறு விமர்சனங்களை அரச குடும்பம் சந்தித்துள்ளது. இந்நிலையில் தங்கள் தவறுக்கு வருந்துவதாக டச்சு அரச குடும்பம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவட்டங்களில் காத்திருக்கிறது செம மழை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

4 நாட்களுக்கு பின் தங்கம் விலையில் ஏற்றம்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

புதிய ஐபோன்16 சீரிஸ் மொபைலில் Visual Intelligence வசதி.. பெரும் வரவேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments