Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியம் வரையும் யானை! திறமையா? துன்புறுத்தலா?

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (18:04 IST)
யானை ஒன்று தன்னை தானே ஓவியமாக வரையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
யானை ஒன்று ஓவியம் வரையும் காட்சி தற்போது சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. யானை ஒன்று ஓவியம் வரையக்கூடிய தூரிகையை தனது தும்பிகையால் தாளில் யானை ஒன்று பூக்களுடன் இருப்பது போன்று வரைகிறது.
 
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். பெரும்பாலனவர்கள் சூப்பர், அருமை, வியப்பு என கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த யானை இந்த ஓவியத்தை வரைய அதை வளர்ப்பவரிடம் எவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 
யானை ஒரு விலங்கு அதற்கென்று தனி தன்மைகள் உண்டு. யானை மனிதன் கிடையாது அதற்கு பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் துன்புறுத்துவதற்கு. யானைகள் காட்டை விட்டு வெளியே வளர்க்கப்படுவதே ஒருவகையான துன்புறுத்தல்தான். இந்நிலையில் யானைக்கு ஓவியம் பயிற்சி கொடுத்து அதை துன்புறுத்தி வரைய செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் ஒரு கேள்வியும் எழுகிறது. அந்த யானை வீடியோவில் வரையும் ஓவியத்தை தவிர வேறு ஏதும் ஓவியம் வரைய இயலுமா?
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments