Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் கார் ஏற்றி படுகொலை

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (08:13 IST)
தஜிகிஸ்ஹான் நாட்டில் பயணம் செய்த வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் சைக்கிள் ஓட்ட வீரர்கள்  வெகுதூரம் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்படி அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் 4 பேர் அவர்களது நாட்டிலிருந்து தஜிகிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
 
அப்படி அவர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருந்தபோது வெவ்வேறு இடங்களில் அவர்கள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துபோக ஒருவர் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
 
இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  இறந்துபோனவர்களில் 2 பேர் அமெரிக்காவையும் மற்ற 2 பேர் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சார்ந்தவர்கள்.
 
இந்த கொடூரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்தில் தஜிகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments