Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒழுங்கா இழப்பீடை செட்டில் பண்ணுங்க! – பாயும் ஜெர்மனி பதுங்கும் சீனா!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (12:41 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட சீனாவே காரணம் என குற்றம் சாட்டி இழப்பீடு கேட்டுள்ளது ஜெர்மனி.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட நாட்டினை குற்றவாளியாக கருத முடியாது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சீனாவினால் ஜெர்மனி பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 149 பில்லியன் யூரோக்களை இழப்பீடாக கேட்டுள்ளது ஜெர்மனி. இதுகுறித்து ஜெர்மனி வெளியிட்டுள்ள பட்டியலில் சுற்றுலா இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறை இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவைகள் தொடர்பான இழப்புக்கு 1 பில்லியன் யூரோக்களும், தொழில்ரீதியான இழப்புகளுக்கு 50 பில்லியன் யூரோக்களும் என ஒரு பெரும் பட்டியலையே அளித்துள்ளது.

ஜெர்மனியின் இந்த செயலுக்கு பதிலளித்துள்ள சீனா உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநொய்க்கு ஒரு குறிப்பிட்ட நாட்டை குற்றம் சொல்ல முடியாது எனவும், சீனா மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் ஜெர்மனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments